புத்தக வாசிப்பு சிறுவயது முதலே பழகிக் கொண்டது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், விக்டர் ஹ்யூகோவின் லே மிசரபிள்ஸ் போன்றவை பாடத்திலேயே இடம் பெற்றிருந்தன. அது தவிர ராமாயணமும் மகாபாரதமும் தீராத காதலை ஏற்படுத்தின. வளர் பருவத்தில் நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் அறிமுகமாகி கவனத்தில் பதிந்தனர். பின்னர் புதுமைப்பித்தனும் பாரதியும் ஆட்டிப் படைத்தனர். தொடர்ந்து மணிக்கொடி எழுத்தாளர் வரிசை, தீபம், கணையாழியில் எழுதிக் கொண்டிருந்த ஆதவன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன் என தீவிரம் அடைந்த வாசிப்பு ஆங்கில கல்வி தந்த பயிற்சியால் உலக இலக்கியங்களின் பக்கமும் திரும்பியது. மார்சல் பிரவுஸ்ட், மிச்சல் பூக்கோ, மரியோ வர்காஸ் லோசா, காப்ரியல் கார்சியா மார்க்யூஸ் , தஸ்தயவஸ்கி.காப்கா, ஹென்றி மில்லர் தல்ஸ்தோய் என பரந்து விரிந்த வாசிப்பு ஒரு கட்டத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமும் ஓஷோவிடமும் வந்து சிக்கிக் கொண்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்த போது கம்பர் கைகொடுத்தார். கம்பனின் தமிழ் என்னை வேறு எதையும் சிந்தி்க்க விடாமல் செய்தது. கம்பராமாயண கூட்டங்களில் பங்கேற்றேன். சில காலம் உடல் நோய், மன உளைச்சல், வாழ்வின் பரிதவிப்புகள் காரணமாக புத்தகத்தைத் தொடாத நாட்கள் அதிகரித்தன. ஆனால் அதிலிருந்தும் மீண்டு மீண்டும் வாசிப்புக்கு என்னை உட்படுத்திக் கொண்டு வருகிறேன். வாசித்த புத்தகங்கள் ஏராளம். ஒரு குறிப்பு கூட அதைப்பற்றி பதிவு செய்யாமல் இருப்பது உறுத்தலாகிறது. அதை விட வாசிக்காமல் இருக்கும் புத்தகங்களின் சுமை....என் ஆயுள் முடியும் முன்பு வாசித்தும் எழுதியும் விட்டால் நிம்மதி
Thursday 4 July 2019
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
ஜென் தேநீர் செந்தூரம் ஜெகதீஷ் கோப்பை 11 பாஷோவின் ஹைகூ கவிதைகள்.... 1 விரிந்த கிளையில் காக்கை கூடு கட்டும் இலையுதிர் காலத்தில் 2...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
No comments:
Post a Comment