Monday 22 January 2018

சென்னை புத்தகக் காட்சி 2018

சென்னை புத்தகக் காட்சிக்கு 13 நாட்களில் ஏழெட்டு நாட்கள் சென்றேன். எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், மனுஷ்யபுத்திரன், காலச்சுவடு கண்ணன், காலசுப்ரமணியம், அகரம் கதிர், செல்வி, கே.பி.ஷைலஜா, சூத்ரதாரி, க.மோகனரங்கன், மகுடேசுவரன், முத்து காமிக்ஸ் விஜயன், சூர்யராஜன், அழகிய சிங்கர், பெருந்தேவி, இவள் பாரதி, இமையம், தமிழ்மணவாளன், பா. உதயக்ண்ணன், விஜயேந்திரா,  உள்பட ஏராளமான படைப்பாளிகளுடன் பேச முடிந்தது. என் வீட்டில் இருந்த புத்தகக் குவியலில் தமிழ்நூல்களை ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்ததால் என்ன இல்லை என்ன வாங்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவு ஏற்பட்டது. இதன்படி நகுலனின் விட்டுப் போன நூல்கள் யாவும் தேடிப்பிடித்தேன். நகுலன் கட்டுரைகள் மட்டும் வாங்கவில்லை .அது காவ்யா பதிப்பகத்தில் உள்ளது.
இந்த ஆண்டு கி.ராஜநாராயணன், எஸ்.ராமகிருஷ்ணன் நூல்கள் மீது ஈர்ப்பு அதிகமாக இருந்தது. இதே போல் இன்குலாப்.மனுஷ்யப்புத்திரனின் 510 கவிதைகள் அடங்கிய பெருந் தொகுப்பை வாங்கினேன். அவர் நிறைய எழுதிக் குவிக்கிறார். பயமாக இருக்கிறது. கவிதையில் ஜெயமோகன் இவர்,
ஜெயமோகனின் ஈழ இலக்கியம் , சாரு நிவேதிதாவின் பழுப்பு நிறப் பக்கங்கள், நாஞ்சில் நாடன் கதைகள், அராத்துவின் பிரேக் அப், அம்பையின் உடலெனும் வெளி, ஆத்மார்த்தியின் புலன் மயக்கம் 1,2 பிரமிளின் வெயிலும் நிழலும் , விடுதலையும் கலாசாரமும், மகுடம்மலர், பீர்முகமதுவின் எட்வர்ட செய்தும் கீழைத் தேய தேடலும்,சந்திராவின் பூனைகள் இல்லாத வீடு,தேவதேவனின் பள்ளத்தில் உள்ள வீடு, கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புலகம் தொகுப்புகள், ஹசீனின் பூனை அனைத்தையும் உண்ணும், பாலுமகேந்திரா பற்றிய செ,கணேசலிங்கனின் புத்தகம்,இன்குலாப்பின் மணிமேகலை, காந்தள் நாட்கள், இடைமருதூர் மஞ்சுளாவின் நிம்மதி , என்.எஸ்.ஜெகனாதனின் என்னைக் கேட்டால்,கண்மணி குணசேகரனின் அஞ்சலை,குமாரசெல்வாவின் கயம், குமரகுருபனின் இன்னொருவன் கனவு,எம்.டி.முத்துக்குமாரசாமியின் பிரபஞ்சம் உயிர்சக்தி அறிவுத்தோற்றம். சி.மணியின் எழுத்தும் நடையும்,நகுலனின் நிழல்கள், நாய்கள், இரு நீண்ட கவிதைகள், நாகார்ஜூனனின் மறுதுறை மூட்டம், ஷோபா சக்தியின் பாக்ஸ் கதைப்புத்தகம். எம்.ஜி.ஆர். கொலைவழக்கு, பிரேம் ரமேஷின் கட்டுரையும் கட்டுக்கதையும்,அ.கா.பெருமாளின் சீதையின் தூக்கமும் தமயந்தியின் ஆவேசமும், கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுப்பு, எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை, எழுத்தே வாழ்க்கை, என்னருமை டால்ஸ்டாய், குறத்திமுடுக்கின் கனவுகள்,வாசக பாவம்,கைலாசபதியின் கநாசு கும்பல் குறித்த விமர்சனநூல்-திறனாய்வுப் பிரச்சினைகள், எம்.ஏ.நுக்மானின் சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்,ஆர்.கே.யின் நித்திய வெளி, சுகிர்தராணியின் காமத்திப்பூ, திரிலோக சீதாராமின் கந்தருவ கானம், உமாஷக்தியின் திரைவழிப்பயணம், ச.விஜயலட்சுமியின் எல்லா மாலைகளிலும் எரியும் ஒரு குடிசை, ராகுல் சாங்கிருந்தயாயனின் வால்காவில் இருந்து கங்கை வரை, தாஜ் சீல்ஸ்தாத்தின் உடைந்த குடை, எமிலி ஜோலாவின் காதல்தேவதை, வீரம் விளைந்தது உட்பட ஏராளமான நூல்களை வாங்கி வந்தேன்.
எனது புத்தகங்கள் ஏதுமில்லை இந்த கண்காட்சியில் என்ற ஏக்கம் மிச்சமிருந்தது. இந்த ஆண்டிலாவது சில புத்தகங்கள் அச்சாகி அடுத்த புத்தகக் காட்சியில் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...