இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அளித்து கௌரவித்துள்ளது. மிகவும் தாமதமாக அவர் கிட்டதட்ட ஓய்வு பெறும் நிலையில் உள்ள போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் வாழும் காலத்திலேயே அவருக்கு அளிக்கப்பட்டதில் மகிழ்ச்சி..
இளையராஜாவிடம் பிடிக்காத பல விஷயங்கள் உண்டு. தன்னை ஞானி போல் கருதுவது, பேத்தல்களை தத்துவம் என நினைப்பது,, அகந்தை, பாடல் எழுதும் கவிஞர்களை( வைரமுத்து) தூசு போல் தூக்கியெறிவது, நல்ல வரிகள் தந்த வாலி மறைந்த பிறகு அவர் இடத்தை நிரப்ப இன்னொருவரை கண்டு அடையாமல் இருப்பது, இளந்தேவன், பொன்னடியான், அறிவுமதி போன்ற தீவிரப்படைப்பாளிகளால் ஏற்கப்படாத பலரை வைத்து வைரமுத்து இடத்தை நிரப்ப முயற்சித்தது என்றெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம், எதுகை மோனை மட்டும் தெரிந்த சொந்த சகோதரர் கங்கை அமரனை வான் அளவு புகழுக்கு உயர்த்தியதும் பின்னர் திடீரென கழற்றி விட்டதும் கூட இளையராஜாவை வியப்பும் கசப்புமாக பார்க்க வைத்தது. அதே போல் எஸ்.பி.பி யிடம் ராயல்டி கேட்டு தனது பாடல்களைப் பாட தடைவிதித்தது.
ஆனால் நிச்சயமாக அவர் இசை மேதைதான். ஒவ்வொருநாளும் அவர் பாடல்களைக் கேட்டுத்தான் உயிர் வாழ்கிறேன்.
இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்ல வயது குறைவுதான். ஆனாலும் அந்த கலைஞனுக்கு நன்றியும் வாழ்த்தும் இப்போது கூறாவிட்டால் எப்போது கூறுவது?
இளையராஜாவிடம் பிடிக்காத பல விஷயங்கள் உண்டு. தன்னை ஞானி போல் கருதுவது, பேத்தல்களை தத்துவம் என நினைப்பது,, அகந்தை, பாடல் எழுதும் கவிஞர்களை( வைரமுத்து) தூசு போல் தூக்கியெறிவது, நல்ல வரிகள் தந்த வாலி மறைந்த பிறகு அவர் இடத்தை நிரப்ப இன்னொருவரை கண்டு அடையாமல் இருப்பது, இளந்தேவன், பொன்னடியான், அறிவுமதி போன்ற தீவிரப்படைப்பாளிகளால் ஏற்கப்படாத பலரை வைத்து வைரமுத்து இடத்தை நிரப்ப முயற்சித்தது என்றெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம், எதுகை மோனை மட்டும் தெரிந்த சொந்த சகோதரர் கங்கை அமரனை வான் அளவு புகழுக்கு உயர்த்தியதும் பின்னர் திடீரென கழற்றி விட்டதும் கூட இளையராஜாவை வியப்பும் கசப்புமாக பார்க்க வைத்தது. அதே போல் எஸ்.பி.பி யிடம் ராயல்டி கேட்டு தனது பாடல்களைப் பாட தடைவிதித்தது.
ஆனால் நிச்சயமாக அவர் இசை மேதைதான். ஒவ்வொருநாளும் அவர் பாடல்களைக் கேட்டுத்தான் உயிர் வாழ்கிறேன்.
இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்ல வயது குறைவுதான். ஆனாலும் அந்த கலைஞனுக்கு நன்றியும் வாழ்த்தும் இப்போது கூறாவிட்டால் எப்போது கூறுவது?
No comments:
Post a Comment