Tuesday 21 June 2016

சூஃபி கவிதைகள்

சில சமயங்களில்
அவள் அழகு என்னைப் பைத்தியமாக்குகிறது.
அவளுடைய குரூரமான பிரியங்களை
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவளிடமிருந்து
கண்ணாடியை மறைத்து வையுங்கள்.
அவள் என் துயரத்தை இரட்டிப்பாக்கி விடுவாள்.

-கோமின்
----------------------------------
மரணத்தின் வாள் நுனியிலிருந்து
நான் தப்பி ஓட மாட்டேன்
அதன் கூர்ந்த பார்வையைக் கண்டும்
அஞ்சப்போவதில்லை
அது ஒரு பெருமூச்சு மட்டுமே.
உறக்கத்தில் புரண்டு படுப்பது மட்டுமே.
-  அமீர்

-----------------------------------------

அழுகின்ற கண்களே
அதிருப்தியால் எழும் உங்கள்
வெள்ளங்கள் பெருகினாலும்
அமைதியை நீங்கள் பெறவில்லை.
உங்கள் அலைகளை
அடங்கச் செய்யுங்கள்
அல்லது துயரக் கடல்களில்
இவை உலகையே மூழ்கடித்து விடும் -
-பிகான் (1748)

சுந்தர சுகன் இதழில் பிரசுரமானவை
தமிழாக்கம் -செந்தூரம் ஜெகதீஷ்

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...