Tuesday 5 January 2016

மாலை நேரத்து மயக்கம் -போலியான கருதுகோள்களுக்கு பொய்யான ஆராதனைகள்

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தைப் பார்க்கப் போனேன். தேவிபாரடைஸ் திரையரங்கின் இ  வரிசை வரை கூட்டம் இருந்தது ஆச்சரியமளித்தது. படம் பார்க்க வந்தவர்கள் பெரும்பாலோர் இளைஞர்கள், நடுத்தர வயதினர். ஓரிரு காதல் ஜோடிகளும் நடுத்தர வயது தம்பதிகளும் படத்தைப் பார்க்க வந்ததற்காக வெட்கப்பட்டு கூனி்க்கருகி மற்றவர்கள் பார்வையில் படாமல் தலைமறைவாக அமர்ந்திருந்தனர். படம் அடல்ட்ஸ் ஒன்லி என்பது மட்டுமல்ல, அடிக்கடி கக்கூஸ் வாந்தி ரத்தம் என குமட்ட வைக்கும் காட்சிகளும் வசனங்களும் நாறடித்தன.
என்ன சொல்ல நினைக்கிறார் கீதாஞ்சலி......திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது.
பெண் பாய்பிரண்ட்ஸ் வைத்திருப்பதும் டேட்டிங் போவதும் திருமணத்திற்கு முன்பே மூணாறு போய் ரூம் போட்டு ஒருவாரம் தங்கி வருவதும் தப்பு இல்லை.....
குட் போல்டான தீம் தான் ஆனால் கதாநாயகி மனோஜா கற்பிழக்காத சீதை போல் காட்டியிருப்பது ஏன்.....உன் பாய் பிரண்ட்சுடன் எந்த லெவலுக்குப் போவே,,,,,கிஸ், உரசல்...அல்லது எல்லாமே வா என பிரபு கேட்கும்போது கதாநாயகி பதிலளிக்காததே அவள் தப்பு செய்தவள் போல காட்டுகிறது.
பழக ஆரம்பித்த முதல் நாளே தொடாத ஆண் பெண் உறவு உண்டா என்ன?
கணவன் கிறுக்கன், சைக்கோ, லூசு, அழகற்ற மொக்கை பீசு என்றெல்லாம் கூறி அவன் பாலியல் பலாத்காரம் செய்யும் போது அவனை வெறுத்து ஒதுக்கி செல்லும் அவள் மீண்டும் அவனுடன் சேர்வதுதான் கதை

பாலசந்தர் பயன்படுத்திய அதே பாணி கதை....அந்த ஏழு நாட்களும் மௌன ராகமும் திருமண உறவின் புனிதத்தைப் பேசியதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. அன்பு காதலின் மென்மையையும் கூற முயற்சிக்கிறது. ஆனால் இதில் போலித்தனம் அதிகம். அந்த போலிமைக்கு பொய்யான ஆராதனையும் அதிகம் என்பதால் படம் சலிப்பை ஏற்படுத்துகிறது. புனிதங்களை கட்டிக் காக்க பாலசந்தருக்கு ஒரு நோக்கம் இருந்தது .செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் அது அவசியம்தானா.....நடுத்தர மக்களின் பாலியல் பிறழ்வுகளையும் குடும்பங்களின் மரபுகளையும் அவற்றுக்கிடையான முரண்களையும் சொல்வதுதான் பாலசந்தரின் பாணி. கடைசியில் கணவரிடம் மனைவி திரும்பிவிடுவதும் மனைவியிடம் கணவர் திரும்பி வருவதும் அபூர்வ ராகங்கள் முதல் புதுப்புது அர்த்தங்கள் வரை அவர் பயன்படுத்திய உத்தி. இதே தான் கீதாஞ்சலியும் செல்வராகவனும் செய்திருக்கிறார்கள்.
பெண்கள் பொய்யானவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். பேஸ்புக் காதலனுடன் மூணாறு வரும் பெண்ணும் காதலனுடன் ஆடி மது அருந்தும் காதலியும்தான் யதார்த்தம். இன்றைய பெண்களின் சீரழிவை சித்தரித்த வரையில் இப்படம் சரியான தடத்தில் செல்கிறது. ஆனால் பிரபுவின் சந்தேகத்தை தெளிவுபடுத்தி மனோஜா காதலனின் விரல் பட அனுமதிக்காதவள் என்பது போல் பாவலாக்கள் ஏன்?
படத்தின் அருமையான கண்டுபிடிப்பு நாயகி வாமிகா... அழகான பப்ளிமாஸ் நாயகி....பாக்யராஜின் வீட்ல விசேஷங்க பிரகதி, சின்னதம்பி குஷ்பூ வரிசையில் அழகான குண்டான தள தள தக்காளி போல் படம் முழுக்க வந்து மனதைக் கவர்கிறார். பாத்திரப்படைப்பில்தான் கோளாறு
இன்னொரு தளத்திற்கு ஆண்-பெண் உறவையும் திருமண உறவுகளின் போலித்தனத்தையும் கொண்டு செல்ல வாய்ப்பிருந்தும் சொல்லாமல் நழுவியதால் இப்படம் மனத்தை கவராமல் சிறிய சலனத்துடன் நின்று விடுகிறது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...