Saturday 2 January 2016

அரிதினும் அரிதுகேள் 23 நெல்லறுக்கும் சோலை ஒன்னு செல்லரிச்சுப் போனதடி.....


கிழக்கு வாசல் படம் ஆர்.வி.உதயகுமார் இயக்கியது. இதில் கார்த்திக்கை காதலித்து வேறொருவரை மணமுடிக்கும் குஷ்பூவை எண்ணி கார்த்திக் பாடுவதாக அமைந்த பாடல் பாடிப்பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே.....இப்பாடலின் இடையே உணர்ச்சிகரமான காட்சிகள்....கார்த்திக்கின் தாயான ஆச்சி மனோரமாவை குஷ்பூவின் காதலை எதிர்க்கும் அவர் குடும்பத்தினர் அடித்து உதைத்து அவரை சாகடிக்க, கார்த்திக் சாவு சுமந்து செல்லும் சோகத்துடன் இழந்த காதலையும் கூறும் வேதனைப்பாடல் இது....இந்தப்பாட்டுக்கு ஆர்.வி. உதயகுமார் எழுதிய வரிகள் அபாரமானவை....அதே சமயம் பாடிய பாலசுப்ரமணியத்தின் குரல் ஒரு தேன் அமுதம். எல்லாவற்றுக்கும் மேலாக இசைஞானி இளையராஜாவின் இசையும் ஆர்க்கெஸ்ட்ராவும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. காதலின் சோகத்தை கிராமிய மொழியில் மயக்க வைக்கும் இசையில் தந்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள. மறக்க முடியாத காதல் பாடல்களில் என் பிரியமான பாடலாக இது எப்போதும் நீடித்திருக்கிறது. 1990 ல் இந்தப் படம் வெளியான போது நானும் ஒரு காதலை, காதல் தோல்வியை எதிர்கொண்டதால் அந்தப் பாடல் என்மனதுக்குள் ஆழமான வடுவை ஏற்படுத்தியது.





பாடிப் பறந்த கிளி
பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

ஒத்தையடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது கானாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொன்னு செல்லரிச்சுப் போனதடி
கல்லில் அடிச்சா அது காயம் காயம்
சொல்லில் அடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு












படம்: கிழக்கு வாசல்
இசை: இளையராஜா
பாடல்: ஆர்.வி.உதயகுமார்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...