அண்மையில் பார்த்த திரைப்படங்களில் பத்லாபுர் பார்த்த அனுபவம் மனதில் நிற்க கூடியது. அடர்த்தியான ஒரு கிரைம் கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இவர் ஏற்கனவே எடுத்த ஓரிரு படங்கள் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும் இந்தப் படம் பேசப்படும். காரணம் இதில் உள்ள பழிவாங்கும் கதையை சொன்ன விதம்.
THE AXE FORGETS
BUT TREE REMEMBERS
கோடாரி மறந்தாலும் மரம் மறக்காது என்ற ஆப்பிரிக்க பழமொழியே இதன் கரு
சாக்லேட் பாயாக இருந்த வருண் தாவனுக்கு இதில் கனமான பாத்திரம். நேர்த்தியாக நடித்திருக்கிறார். கதாநாயகியர் 4 பேர் இருப்பினும் அவர்களில் மூவர் உடல் அழகை காட்டவே பயன்படுத்தப்படுகிறார்கள். ராதிகா ஆப்தே பிராவும் ஜட்டியுமாக காட்சியளிக்கிறார். திவ்யா தத்தா இடுப்பையும் முதுகையும் காட்டி ஒரு அழுத்தமான முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். யாமி கவுதம் படத்தின் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அழகாக சிரிக்கிறார். இருப்பினும் ஹூமா குரேஷி விலைமாதுவாக வந்து மனம் கவர்கிறார்.
வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக் அற்புதமான நடிகர் ஜெயிலை விட்டு போகும் போது சக கைதிகளை நக்கலடிக்கும் காட்சியிலும் மீண்டும் சிறைக்கு வரும் போது துபாயில் எல்லாமே அற்புதமாக இருந்தது என்று பீலா விடும் காட்சியிலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் கவுதம் கார்த்திக் நடிக்கலாம் என்று நண்பர் ஒருவர் கூறினார். நல்ல சாய்ஸ்<
நவாசுதீன் கேரக்டருக்கு வடிவேலு அபாரமாக பொருந்துவார்.
திவ்யா தத்தா கேரக்டருக்கு சிநேகா
யாமி கவுதம் கேரக்டருக்கு மீரா நந்தன்
ஹூமா குரேஷி ரோலுக்கு நயனதாரா>
நல்லாத்தான் இருக்கும்
No comments:
Post a Comment