Friday 6 February 2015

சாரு நிவேதிதாவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு,
நட்புடன்தான் அழைக்கிறேன். அவமரியாதையாக கருத வேண்டாம். இதயத்துடன் நெருக்கமான நண்பரைப் போல் பல நேரம் உங்கள் எழுத்து உணரச் செய்கிறது.
ஆனால் தடாலடியான சில கருத்துகளும் முரணான வாழ்க்கையும் உங்களை விட்டு தள்ளி நிற்க செய்து விட்டது. மது அருந்த மாட்டேன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
25 ஆண்டுகளாக எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் முதலே உங்கள் எழுத்தைப் படித்து வருகிறேன். இப்போதும் எக்ஸைல் படித்துக் கொண்டிருக்கிறேன். ராசலீலா வாங்க பணமில்லை என்பதே உண்மை.
உங்கள் எழுத்து குறிப்பாக fiction மற்றும் நீங்கள் குறிப்பிடும்
trans gressive writer போன்ற சொற்கள் எனக்கு உகந்ததாக இல்லை. ஒரு அவசரக் கோலம்,ஆறாத தாகம் தெரிகிறது. ஆனால் கட்டுரைகளில் நீங்கள் ஒரு
ஜீனியஸ்தான்.கு.ப.ராவைப் போல உருவ அமைதி உங்கள் புனைகதையில் இல்லை என்பது எனது கருத்து. ஒரு முறை குபரா போன்றவர்களையே தயிர்வடை எழுத்து என நீங்கள் நிராகரித்ததாக ஞாபகம் அல்லது குழப்பம்.

உங்களுடன் பல வகையில் முரண்பட்ட போதும் நண்பராக சக படைப்பாளியாக ரசித்தும் வந்திருக்கிறேன். சில முறை என்னிடம் நீங்கள் பேசியதும் பேட்டியளித்ததும் அந்த நட்பினால் என்று நம்புகிறேன்.

தமிழ்ச்சூழல் எழுத்தாளரை மதிக்கவில்லை என்பது உண்மைதான். நானும்
எழுத்தின் மீது நம்பி்க்கை இழந்து வருகிறேன்.நான் எழுதியவற்றை
தேடிப்படிக்க உங்களை கட்டாயப்படுத்தவும் மாட்டேன்.

புத்தகக் கண்காட்சியில் உங்கள் மீதான வன்முறையைக் கண்டிக்கிறேன். மனுஷ்யப்புத்திரன் தெளிவாக எதிர்வினையாற்றியிருக்கிறார். இனி உங்கள் கூட்டத்தில் உங்கள் பக்கம் நானும் இருக்க விரும்புகிறேன். ரவுடிகளை அடிக்கும் பலம் எனக்கும் இல்லை என்றாலும் மாரல் சப்போர்ட்டுக்காக
நன்றி
அன்புடன்
செந்தூரம் ஜெகதீஷ்

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...