காமம் பொங்கி வழியும் முகங்களும் கண்களும் மூடி மறைக்கும் மனங்களும் நித்தம் காணும் காட்சிகளாகி விட்டன.நடிகைகளின் வாளிப்பான உடல்களும் இணையத்தில் கிடைக்கும் நிர்வாணமும் நம்மை அலைக்கழிக்கின்றன. சுடியும் ஜீன்சும் டைட்சும் அணிந்து நடமாடும் பெண்களால் நமது இருப்பு குலைந்து விடுகிறது. புடவை கட்டியவர்களும் இடுப்பின் இறக்கத்தையும் புட்டத்து மேடுகளையும் கண்ணில் படச் செய்து மார்பின் திரட்சியால் மதிமயக்குகின்றனர். எங்கு நோக்கினும் காமமே தெரிகிறது நமக்கு. பள்ளிக்குச் செல்லும் சிறுமி முதல் அலுவலகம் செல்லும் பெண் மட்டுமின்றி பிள்ளைகள் பெற்ற தாய்மார்களும் தப்பவில்லை இந்த காமத்தின் கணையிலிருந்து. பெண்ணின் விரலைத் தொட்டுப் பார்க்கவே பல வித்தைகள் செய்கின்றனர் பயலுகள். கைக்குலுக்கவும் கையுடன் கையை இறுக்கிக் கோர்த்து பலப்பரீட்சை செய்யவும் அழைப்புகள் ஏராளமாக ஆண்களின் தரப்பில் நீளுகின்றன. பெண்களும் கூச்சமில்லாமல் தொட்டுப் பழகுகின்றனர். தி.நகரிலும் புரசைவாக்கத்திலும் வரிசையாக அமர்ந்திருக்கும் இளைஞர்களிடம் மருதாணி பூச பெண்கள் கை நீட்ட அவள் கையை தன் தொடை மேல் வைத்து மெல்ல நீவி விட்டவாறே மருதாணி பூசும் அந்த இளைஞனின் மனநிலை என்னவாக இருக்கும் என்றே யோசிக்கிறேன். வருமானமில்லாமல் திருமணமில்லை என்ற நிலை ஆண்களுக்கு வரதட்சணை இல்லாமல் வரன் இல்லை என்ற நிலை பெண்களுக்கு. திருமணம் இல்லாமல் பாலியல் உறவு இல்லை என்பது சமூகம்.
மணமாகி சேர்ந்து வாழும் பலரும் சேர்ந்து படுப்பதில்லை. தாலியின் எல்லையைத் தாண்டி முறை தவறினால் அது சட்டத்திலும் தப்பு என தண்டிக்கப்படும்.
பின் என்ன தான் செய்வான் ஆண் என்னதான் செய்வாள் பெண்........பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது, மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது என்று எம்ஜிஆர் பாடி வைத்தார்.
பெண்ணின் உடல் ஆணின் இலக்கு ஆகி விட்டது. ஆணிடமிருந்து கிடைக்க கூடிய அன்பை விட அவனால் கிடைக்க கூடிய வசதியான வாழ்க்கையும் ஆடம்பரமும்தான் பல பெண்களின் இலக்காகி விட்டது. இதனால் கொலைவெறிகள் அதிகமாகி விட்டன.
நண்பர்களே இப்பகுதி காமத்துக்காக எனது அர்ப்பணிப்பு.
காமம் தொடர்பான கட்டுரைகள், ஓஷோவின் எண்ணங்கள், காமத்தைத் தூண்டும் சமூகத்தின் மீதான விமர்சனம், பாலியல் குற்றச்சாட்டுகளின் அசல் முகங்கள், திரைப்படங்களில் காட்சி ரீதியாக கிடைக்க கூடிய பாலியல் பிம்பங்கள், காமத்தில் ரசிக்க கூடிய விஷயங்கள், குற்றங்களை உருவாக்கும் கள்ளத் தொடர்புகள் என எதை வேண்டுமானாலும் பேசலாம். நிறைய இருக்கு பகிர்ந்துக் கொள்ள. பொறுத்திருங்கள்.
மணமாகி சேர்ந்து வாழும் பலரும் சேர்ந்து படுப்பதில்லை. தாலியின் எல்லையைத் தாண்டி முறை தவறினால் அது சட்டத்திலும் தப்பு என தண்டிக்கப்படும்.
பின் என்ன தான் செய்வான் ஆண் என்னதான் செய்வாள் பெண்........பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது, மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது என்று எம்ஜிஆர் பாடி வைத்தார்.
பெண்ணின் உடல் ஆணின் இலக்கு ஆகி விட்டது. ஆணிடமிருந்து கிடைக்க கூடிய அன்பை விட அவனால் கிடைக்க கூடிய வசதியான வாழ்க்கையும் ஆடம்பரமும்தான் பல பெண்களின் இலக்காகி விட்டது. இதனால் கொலைவெறிகள் அதிகமாகி விட்டன.
நண்பர்களே இப்பகுதி காமத்துக்காக எனது அர்ப்பணிப்பு.
காமம் தொடர்பான கட்டுரைகள், ஓஷோவின் எண்ணங்கள், காமத்தைத் தூண்டும் சமூகத்தின் மீதான விமர்சனம், பாலியல் குற்றச்சாட்டுகளின் அசல் முகங்கள், திரைப்படங்களில் காட்சி ரீதியாக கிடைக்க கூடிய பாலியல் பிம்பங்கள், காமத்தில் ரசிக்க கூடிய விஷயங்கள், குற்றங்களை உருவாக்கும் கள்ளத் தொடர்புகள் என எதை வேண்டுமானாலும் பேசலாம். நிறைய இருக்கு பகிர்ந்துக் கொள்ள. பொறுத்திருங்கள்.
No comments:
Post a Comment