Thursday 12 January 2017
சந்திப்பு - அம்பை
எழுத்தாளர் அம்பையின் கதைகள் மீது எனக்கு இளம் வயது முதலே ஈர்ப்பு உள்ளது. சென்சிபல்என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான இலக்கியம் அவருடையது. அவர் யார் எனத் தெரியாமல்தான் பல ஆண்டுகளாக அவர் கதைகளை சிற்றிதழ்களிலும் பின்னர் காட்டில் ஒரு மான், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை போன்ற தொகுப்புகளிலும் வாசி்த்திருக்கிறேன். நண்பராக இருந்த ஜெயமோகன் நடத்திய சொல்புதிது இதழில் அம்பை கதைகளைக் குறித்து விரிவான கட்டுரை ஒன்றும் எழுதியிருக்கிறேன்.
சென்னை புத்தகக் கண்காட்சியின் விருட்சம் அரங்கில் தற்செயலாக அம்பையை சந்திக்க நேர்ந்தது. அழகிய சிங்கர் அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவரிடம் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன். அட நீங்கதானா செந்தூரம் ஜெகதீஷ் என மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிய அவர், எனது கிடங்குத் தெரு நாவலை மிகவும் விரும்பியதாக கூறினார். ஐ லவ் தட் நாவல் என்று அவர் கூறுவதைக் கேட்க எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. சுந்தர ராமசாமியும் அந்த நாவலை விரும்பியிருக்கிறார் என்று காலச்சு வடு கண்ணன் முன்பு எனக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிந்தது. பிரம்மராஜனும் காலச்சுவடு கட்டுரையில் அந்த நாவலை குறிப்பிட்டார். நாஞ்சில் நாடன் மிக சுவாரஸ்யமான இலக்கியப் படைப்பு எனப் பாராட்டியிருக்கிறார். கோவை ஞானி, பிரபஞ்சன், க.மோகனரங்கன் என பலர் விமர்சனம் செய்துள்ளனர். இது எனக்கு மிகவும் பெருமையானதுதான். அம்பையும் இந்தப்பட்டியலில் இணைந்தார். அந்த நாவல் போதிய கவனம் பெறாமல் போய்விட்டதாக ஒரு சிறு ஏக்கம் இருக்கிறது. மறுபதிப்புக்கும் தயாராகி வருகிறேன். நான் அந்த நாவலைப் பற்றி எழுதுகிறேன் என்றார் அம்பை.
கடைசியில் அவரிடமிருந்து விடைபெறும் போதும் மகிழ்ச்சியை தெரிவித்த அவர் இந்தியில் உங்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது என்று கூறினார்.( மஜா ஆயா
அம்பை எனும் ஆளுமையிடம் பேசிய சில மணித்துளிகள் முக்கியமானவை. இலக்கியத்தில் இதையெல்லாம் யாராவது பதிவு செய்தால் தேவலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
ஜென் தேநீர் செந்தூரம் ஜெகதீஷ் கோப்பை 11 பாஷோவின் ஹைகூ கவிதைகள்.... 1 விரிந்த கிளையில் காக்கை கூடு கட்டும் இலையுதிர் காலத்தில் 2...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
No comments:
Post a Comment