நான் சிறுவயது முதலே ஜேசுதாசின் ரசிகன். இந்த பாடலும் அதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். தேன்சிந்துதே வானம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை படம் பார்க்காமலேயே நேசிக்கத் தொடங்கி விட்டேன். சிவகுமார் ஜெயசித்ரா நடித்த இப்படம் இப்போது கிடைப்பது அரிது. முன்பு ஒரு விசிடி வாங்கி விட்டேன். அதுதான் என்னிடம் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் யூ டியூப்பில் கிடைக்கிறது.எந்த புண்ணியவானோ இப்படிப்பட்ட நல்ல நல்ல பாடல்களையும் யூ டியூப்பில் போட்டு பொதுவுடைமை ஆக்கி விட்டான். வாழ்க.
வி.குமார் இசையில் ஜேசுதாஸ் பாடிய வாலியின் பாடல் இது
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே.......
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப்பார்வையெல்லாம் தெய்வீகம்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது
( உன்னிடம் மயங்குகிறேன் )
தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
ஆ........ஆ.......ஆ.......
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
இந்த ஆ..... ஆ....எனுமிடத்தில் ஜேசுதாஸ் குரல் ஒரு பெரியமந்திரம் போல என்னை கட்டுண்டு கிடக்கச் செய்திருக்கிறது. இப்போதும் ஜேசுதாஸ் பாடல்களில் எனக்குப் பிடித்த பத்து பாடல்களில் இந்தப் பாடலும் நிச்சயமாக இருக்கும்.
No comments:
Post a Comment