கர்நாடக சங்கீதத்தைப் புரிந்துக் கொள்ள பலமுறை முயன்று போரடித்ததால் விட்டு விட்டேன். டிசம்பர் இசைக் கச்சேரிகளுக்கும் போய் பார்த்தேன். உணவுதான் ருசித்தது தவிர ராகங்களும் ஆலாபனைகளும் அல்ல. மாறாக எப்போதும் சினிமா இசைதான் என்னை ஆக்ரமித்தது.
பித்துக்குளி முருகதாசும் திரையிசை மூலம் தான் எனக்குத் தெரிய வந்தார். தெய்வம் படத்தில் நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமி மலை என்று பாடிய போது அவரே நடித்திருந்தார். மைனர் போல சட்டையும் வேட்டியும் கட்டி கருப்பு கண்ணாடி போட்டு வெண்தாடியுடன் வித்தியாசமாக காட்சியளித்த பித்துக்குளி முருகதாஸ் முதல் பார்வையிலும் குரலிலும் மனத்தில்நீங்கா இடம் பெற்றுவிட்டார்.
No comments:
Post a Comment