Thursday 9 January 2020

புத்தகக் காட்சி 2020

முதல் நாளில் புத்தகக் காட்சியில் பார்க்க அதிகம் கிடைக்காது என்பது அனுபவம். ஆனால் எனது நூல்களை விநியோகிக்க வேண்டியிருந்ததால் சென்றேன். நண்பர் கவிஞர் நிமோஷினி இணைந்து கொண்டார். கவிதை நூல்களை ஆர்வமாக தேடினார். சிலவற்றை வாங்கினார். காலச்சுவடு கண்ணனை சந்தித்தோம். தொடர்ந்து சுற்றியதில் நண்பர் பா.உதயகண்ணனை அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்திலும் நண்பர்கள் அழகிய சிங்கர், கிருபாகரனை விருட்சம் அரங்கிலும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
சீரோ டிகிரி அரங்கில் காயத்ரி மற்றும் ராம்ஜியுடன் சில நிமிடங்கள் உரையாடல். சாரு நிவேதிதா தினம் தனது நூல்களில் கையெழுத்திட இந்த அரங்கிற்கு மாலை 5.30 மணிக்கு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
வந்ததற்காக சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். அடுத்த ஆண்டு முதல் புத்தகங்கள் வாங்குவதை 50 சதவீதம் குறைக்க முடிவெடுத்துவிட்டேன். என்னை மதிக்காத எழுத்தாளர்களை இனி ஒதுக்கவும் முடிவு. ஷாஜிக்கு பலமாதங்களுக்கு முன்பு முகநூலில் நட்பு விண்ணப்பம் தந்து இதுவரை ஏற்பு வரவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு அவருடைய புதிய புத்தகத்தை வாங்கி வந்தேன். அவர் எழுத்து பிடிக்கும் என்பதால், நான் யார் என் பலம் என்ன எனத்தெரியாமல் அஞ்ஞானத்தில் அவர் தொடர்ந்து இருப்பாரேயானால் அடுத்த ஆண்டு முதல் அவரையும் ஜெயமோகனைப் போல புறக்கணி்ப்பேன். எப்போதும் புறக்கணிக்க முடியாதவர்கள் பெண்களும் முதல் நூல் போட்டு ஆர்வமாக பேசும் படைப்பாளிகளும்தான். சில இலக்கிய ஆளுமைகள் எப்போதும் பிடித்தவர்கள். திலீப்குமார், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், தேவதேவன், அம்பை, மனுஷ்யபுத்திரன் , சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் , கல்யாண்ஜி போன்றவர்கள்.....அவர்களை மதிக்கிறேன். அதே போல் எழுத்தாள நண்பர்கள் பாவண்ணன், க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், வாமு கோமு, மகுடேசுவரன் போன்றோரின் மீதும் பிரியம் உண்டு. அவர்கள் நூல்களையும் வாங்கத்தான் செய்கிறேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...