காலையில் 6 மணி்க்கெல்லாம் எழுந்துவிடும் வழக்கம் உடையவன் நான். இன்று-(09-04-2015) காலையும் வழக்கம் போல் எழுந்து எலிசபெத் டெய்லர் நடித்த ஒரு பழைய ஆங்கிலப் பட டிவிடியைப் போட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். விக்கி டியூசன் போக அழைத்தான். படத்தை நிறுத்தி அவனை அனுப்பி விட்டு வரும் போது இந்து ஆங்கில பேப்பரை வாசலில் இருந்து எடுத்து வந்து தலைப்பைப் பார்த்து கீழே பார்வையை ஓடவிட்டதும் அந்த அதிர்ச்சிகரமான செய்தி காத்திருந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமாகிவிட்டார். நம்ப முடியவில்லை, கண்களை கசக்கி மீண்டும் மீண்டும் பார்த்தேன். உண்மைதான். இனி ஜே.கே என்ற அந்த கம்பீரமான மனிதரை பார்க்க முடியாது என்ற யதார்த்தம் உறைந்தது. நீண்ட நேரம் குளிக்காமல் இருந்தேன். சாவு வீட்டுக்குப் போகும் மனம் இல்லை.போகலாமா என நண்பர் சூர்யாவைக் கேட்ட போது, வரவில்லை. வழக்கம் போல நானும் ஜெயகாந்தன் சாகவில்லை என்று சமாதானம் செய்துக் கொண்டு அவரது இறுதிச்சடங்கைப் பார்க்க போகவில்லை
ஜெயகாந்தனுடன் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ரயிலில் அவரும் தோழர் நல்லகண்ணும் இருக்கும் போது அவர்களுடன் கோவை வரை பயணித்திருக்கிறேன். சொல் புதிது இதழுக்காக நண்பர் ஜெயமோகனுடன் சேர்ந்து நீண்டதொரு பேட்டி எடுக்க உதவியிருக்கிறேன்.அவரைப் பற்றிய பகிர்தல்கள் ஏராளமாக இருக்கின்றன.மனம் அடைத்துக் கொண்டிருக்கிறது. அடைப்பு நீங்கி அழுவேனா எனத் தெரியவில்லை
ஜெயகாந்தனுடன் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ரயிலில் அவரும் தோழர் நல்லகண்ணும் இருக்கும் போது அவர்களுடன் கோவை வரை பயணித்திருக்கிறேன். சொல் புதிது இதழுக்காக நண்பர் ஜெயமோகனுடன் சேர்ந்து நீண்டதொரு பேட்டி எடுக்க உதவியிருக்கிறேன்.அவரைப் பற்றிய பகிர்தல்கள் ஏராளமாக இருக்கின்றன.மனம் அடைத்துக் கொண்டிருக்கிறது. அடைப்பு நீங்கி அழுவேனா எனத் தெரியவில்லை
No comments:
Post a Comment