Thursday, 26 March 2015

பக்தி குறையும் காலம்

வயதாக வயதாக பக்தி அதிகமாகும் என்பார்கள். பெரியாருக்கு முதிர்ந்த வயது வரை பக்தி பழுக்கவே இல்லை.பல கம்யூனிஸ்ட் தோழர்கள் இளமையில் நாத்திகம் பேசி முதுமையில் கோவிலுக்குப் போவதைப் பார்த்திருக்கிறேன். கமல்ஹாசன் கூட நாத்திகர்தான். ஆனால் அவர் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. முகுந்தா முகுந்தா என தசாவதாரத்தில் பக்தி மழை பொழிந்தார். படத்தின் பெயரே தசாவதாரம்தான். கவிஞர் வைரமுத்துவும் நாத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும் என்று எழுதினார். அண்ணாதுரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என பகுத்தறிவுக் கொள்கைக்கு புதிய விளக்கம் அளித்தார்.இதெல்லாம் போகட்டும் என்னுடைய அனுபவம் வேற மாதிரி.
35 வயது வரை நாத்திகமும் மார்க்சியமும் தான் எனது பாதை. எந்தக் கோவிலுக்கும் போனதி்ல்லை, கடவுளிடம் ஏதும் கேட்டதில்லை.எனக்குக் கிடைத்த நண்பர்கள் கூட நாத்திகர்கள்தாம். கோவையில் ஒரு தோழி, ராம்நகரில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கடவுளை கும்பிட வைத்து நெற்றியில் விபூதி வைத்துவிட்டாள். என்குடும்பத்தினர் அனைவருக்கும் பக்தி அதிகம். ஆனால் குடும்பத்துடன் தாமரை இலை நீர்போலவே வாழ்ந்ததால் கடவுளும் ஒட்டவே இல்லை. 35 வயதுக்குப் பின் ஓஷோ மூலம் மார்க்சியம் வெளிறத் தொடங்கிய போதுதான் கோவிலுக்குப் போகலானேன். தனியாகவும் .குடும்பத்துடனும்.
தனியாக கோவிலுக்குப் போன அனுபவங்களை வைத்து திருவேங்கடம் என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
திடீரென 50 வயதை கடந்த பின் ஒரு பின்-ஞானோதயமாக சமீபத்தில் கோவிலும் கடவுளும் எனக்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன. எனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை கடவுள் தந்தார் என்றால் அவருக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.ஆனால் இ்ப்படி நினைக்கும் போது விக்கி என் முன்னால் வந்து நிற்கிறான். இந்த அழகான குழந்தையை எனக்கு பரிசளித்த கடவுளுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் குறைவுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
என் விக்கியை நல்லா வாழ வை என்று கேட்கவாவது கடவுளை வணங்கிக் கொண்டிருக்கிறேன்.

Sunday, 15 March 2015

இளையராஜாவும் இசைத்திருட்டும்

இசைஞானி இளையராஜா தமது பாடல்கள் உரிமம் பற்றி கிட்டதட்ட ஓய்வு பெறும் வயதில் ஞானோதயம் வந்தவராக காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். சில நிறுவனங்களின் மீது உரிமம் இல்லாமல் விற்பனை செய்வதாக வழககும் போட்டிருக்கிறார்.
நிச்சயமாக தமது படைப்புக்கான உரிமை கோருவதில் படைப்பாளிக்கு முழு தகுதி உண்டு. இளையராஜா தமது பாடல்களுக்காக வாங்கிய ஊதியத்தை விட பல மடங்கு அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும். நான் ஏர்டெல் மொபைலில் ராஜா சாரின் நல்லதோர் வீணை காலர் டியூனை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். மாதம் அதற்காக 30 ரூபாய் கட்டணம் செலுத்தி வருகிறேன். எதி்ல் எத்தனை சதவீதம் பணம் அவருக்குப் போய்ச் சேருகிறது?
இப்படி அவர் இசையமைத்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில் இசைத்தட்டு, ஆடியோ கேசட்,சிடி,விசிடி, டிவிடி வடிவில் உரிமம் பெறாமல் பதிவாகி பல லட்சம் லட்சமாக விற்பனையாகி அதி்ல் கொள்ளை லாபம் அடைந்தவர்கள் எத்தனை பேர்...அது மட்டுமின்றி இணையத்தில் யூடியூப்பில் ஏற்றி விட்ட புண்ணியவான்கள் எத்தனை.
ஒரு படைப்பாளிக்கு உரிய மரியாதையும் அவர் படைப்புக்கான லாபத்தில் பெரும் பங்கும் தரப்பட வேண்டும். இதில் நான் உடன்படுகிறேன். ஆனால் இளையராஜா மாதிரியான ஜாம்பவான்களுக்கு அப்படி கிடைக்காமல் போனது ஏன் என்று யோசி்ப்பது அவசியமாகும். எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, விகுமார், கேவிமகாதேவன் போன்ற முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு நேர்ந்ததுதான் இது. ஏ.ஆர.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட இனியும் பலருக்கு நேரக்கூடியதுதான்.
முதலில் இந்தப் பாடல்கள் வெளியிட்டு மக்களை சென்றடையும் முறையிலேயே கோளாறு உள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பல லட்சம் செலவு செய்து நடத்துகிறார்கள். கிட்டதட்ட நூறு ரூபாய் விலைக்கு ஆடியோ சிடிக்கள் வெளியிடப்படுகின்றன. யார் வாங்குவார்கள்.?
பாடல்கள் ஹிட்டாக இருந்தால் ஓரளவு லாபம் காணலாம். இல்லையென்றால் அது பத்து ரூபாய்க்கு கூட தேறாமல் பழைய குப்பைகளி்ல் போய் விடும்.

இரண்டு வருடங்களுக்கு மேல் இனி எந்த ஒரு திரைப்படப் பாடலும் உயிர் வாழுமா என்ற சந்தேகமான நிலையில் திரையிசை தேய்ந்துக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு அன்றை கொரித்து செரிக்கிற பாப்கார்ன் மாதிரி சினிமா பாடல்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இதை நம்பி எந்த ரசிகனும் ஒருநாள் முழுதும் உழைத்துப் பெற்ற காசிலிருந்து நூறு ரூபாயை ஆடியோ சிடிக்காக செலவழிப்பானா? திருட்டு சிடியில் எம்பி 3 வடிவில் 200 இளையராஜா பாடல்களை அவன் சுலபமாக 20 ரூபாய்க்கு வாங்கி விட முடிகிறது அல்லவா? இது இளையராஜாவுக்குத் தெரியவே தெரியாதா?

ஒவ்வொரு திரைப்படத்துடன் திரைப்பட கட்டணத்திலேயே பத்து அல்லது இருபது ரூபாயை கூடுதலாக தந்தால் பாட்டு புத்தகமும் ஆடியோ சிடியும் படத்தின் டிக்கட்டுடன் வழங்கப்படும் என்றால் அது பலன் தருவதாக இருக்கும்.இதை செய்வதற்கு திரைப்படத்துறைக்கு எது தடையாக இருக்கும் என்று தெரியவில்லை.

திரைப்படம் பார்க்கும் செலவுகள் அதிகமாகி திருட்டி சிடி தொழில் ஓகோ என வளர்ந்ததற்கு காரணம் திரைப்படத்துறையும் திரையரங்கு உரிமையாளர்களும்தான். தப்பை தங்கள் மேல் வைத்துக் கொண்டு வியாபாரிகளையும் பொதுமக்களையும் குறை சொல்லக்கூடாது. விற்க கூடிய சரக்கை விற்கத்தான் செய்வார்கள் வியாபாரிகள்.
சேரன் ஒரு முயற்சி செய்தார்.ஜே.கே.என்ற நண்பனின் கதை திரைப்படத்தை நேரடியாக டிவிடியாக விற்பனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் என்ன நேர்ந்தது? 50 ரூபாய் விலை குறிக்கப்பட்ட அது அடுத்த நாளே 20 ரூபாய்க்கு திருட்டி டிவிடி வடிவில் வந்துவிட்டது. யார் 50 ரூபாய் கொடுப்பார்கள்? அதை அவர் வெளியிடும்போதே 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருக்க வேண்டும். படத்தயாரிப்பு செலவுகள், தனிநபர் வருமானம் போன்றவற்றால் அவருக்கு அது சாத்தியமாகி இருக்காது . போகட்டும் பத்து லட்சம் டிவிடிக்கள் விற்பனையானதாக விளம்பரப்படுத்துகிறார்களே அது உண்மைதானா. உண்மை என்றால் இந்த முயற்சி வளரட்டும்.



















Sunday, 1 March 2015

BADLAPUR movie பத்லாபூர் இந்தி படம்

அண்மையில் பார்த்த திரைப்படங்களில் பத்லாபுர் பார்த்த அனுபவம் மனதில் நிற்க கூடியது. அடர்த்தியான ஒரு கிரைம் கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இவர் ஏற்கனவே எடுத்த ஓரிரு படங்கள் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும் இந்தப் படம் பேசப்படும். காரணம் இதில் உள்ள பழிவாங்கும் கதையை சொன்ன விதம். THE AXE FORGETS BUT TREE REMEMBERS கோடாரி மறந்தாலும் மரம் மறக்காது என்ற ஆப்பிரிக்க பழமொழியே இதன் கரு சாக்லேட் பாயாக இருந்த வருண் தாவனுக்கு இதில் கனமான பாத்திரம். நேர்த்தியாக நடித்திருக்கிறார். கதாநாயகியர் 4 பேர் இருப்பினும் அவர்களில் மூவர் உடல் அழகை காட்டவே பயன்படுத்தப்படுகிறார்கள். ராதிகா ஆப்தே பிராவும் ஜட்டியுமாக காட்சியளிக்கிறார். திவ்யா தத்தா இடுப்பையும் முதுகையும் காட்டி ஒரு அழுத்தமான முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். யாமி கவுதம் படத்தின் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அழகாக சிரிக்கிறார். இருப்பினும் ஹூமா குரேஷி விலைமாதுவாக வந்து மனம் கவர்கிறார்.
வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக் அற்புதமான நடிகர் ஜெயிலை விட்டு போகும் போது சக கைதிகளை நக்கலடிக்கும் காட்சியிலும் மீண்டும் சிறைக்கு வரும் போது துபாயில் எல்லாமே அற்புதமாக இருந்தது என்று பீலா விடும் காட்சியிலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் கவுதம் கார்த்திக் நடிக்கலாம் என்று நண்பர் ஒருவர் கூறினார். நல்ல சாய்ஸ்< நவாசுதீன் கேரக்டருக்கு வடிவேலு அபாரமாக பொருந்துவார். திவ்யா தத்தா கேரக்டருக்கு சிநேகா யாமி கவுதம் கேரக்டருக்கு மீரா நந்தன் ஹூமா குரேஷி ரோலுக்கு நயனதாரா> நல்லாத்தான் இருக்கும்







Friday, 6 February 2015

சாரு நிவேதிதாவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு,
நட்புடன்தான் அழைக்கிறேன். அவமரியாதையாக கருத வேண்டாம். இதயத்துடன் நெருக்கமான நண்பரைப் போல் பல நேரம் உங்கள் எழுத்து உணரச் செய்கிறது.
ஆனால் தடாலடியான சில கருத்துகளும் முரணான வாழ்க்கையும் உங்களை விட்டு தள்ளி நிற்க செய்து விட்டது. மது அருந்த மாட்டேன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
25 ஆண்டுகளாக எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் முதலே உங்கள் எழுத்தைப் படித்து வருகிறேன். இப்போதும் எக்ஸைல் படித்துக் கொண்டிருக்கிறேன். ராசலீலா வாங்க பணமில்லை என்பதே உண்மை.
உங்கள் எழுத்து குறிப்பாக fiction மற்றும் நீங்கள் குறிப்பிடும்
trans gressive writer போன்ற சொற்கள் எனக்கு உகந்ததாக இல்லை. ஒரு அவசரக் கோலம்,ஆறாத தாகம் தெரிகிறது. ஆனால் கட்டுரைகளில் நீங்கள் ஒரு
ஜீனியஸ்தான்.கு.ப.ராவைப் போல உருவ அமைதி உங்கள் புனைகதையில் இல்லை என்பது எனது கருத்து. ஒரு முறை குபரா போன்றவர்களையே தயிர்வடை எழுத்து என நீங்கள் நிராகரித்ததாக ஞாபகம் அல்லது குழப்பம்.

உங்களுடன் பல வகையில் முரண்பட்ட போதும் நண்பராக சக படைப்பாளியாக ரசித்தும் வந்திருக்கிறேன். சில முறை என்னிடம் நீங்கள் பேசியதும் பேட்டியளித்ததும் அந்த நட்பினால் என்று நம்புகிறேன்.

தமிழ்ச்சூழல் எழுத்தாளரை மதிக்கவில்லை என்பது உண்மைதான். நானும்
எழுத்தின் மீது நம்பி்க்கை இழந்து வருகிறேன்.நான் எழுதியவற்றை
தேடிப்படிக்க உங்களை கட்டாயப்படுத்தவும் மாட்டேன்.

புத்தகக் கண்காட்சியில் உங்கள் மீதான வன்முறையைக் கண்டிக்கிறேன். மனுஷ்யப்புத்திரன் தெளிவாக எதிர்வினையாற்றியிருக்கிறார். இனி உங்கள் கூட்டத்தில் உங்கள் பக்கம் நானும் இருக்க விரும்புகிறேன். ரவுடிகளை அடிக்கும் பலம் எனக்கும் இல்லை என்றாலும் மாரல் சப்போர்ட்டுக்காக
நன்றி
அன்புடன்
செந்தூரம் ஜெகதீஷ்

Tuesday, 3 February 2015

இடியட்

பியோதர் தாஸ்தேயவஸ்கியின் இடியட் நாவலின் செம்பதி்ப்பு ஆங்கிலத்தில் சில ஆண்டுகளுககு முன்பு ஆதம்பாக்கம் பழைய புத்தகக் கடையிலிருந்து 250 ரூபாய்க்கு வாங்கி வந்தேன். அதைப் படிக்கவே இல்லை. பலமாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த புத்தகப் பரணில் அது தூங்கி்க் கொண்டிருந்தது. அண்மையில் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்கள் வேறு விதமான சிந்தனைகளைத் தூண்டியிருக்கின்றன. புத்தகப் படிப்பு , நேர்மை போன்றவற்றில் எனது நம்பிக்கை குறைந்து வருகிறது. இது பெரும் அலைக்கழிப்பை ஏற்படுத்தி எனது அரை நூற்றாண்டு வாழ்ககையை கேள்விக்குறியாகவும் கேலிக்குரியதாகவும் ஆக்கியிருந்தது. மதிப்பீடுகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. தவற விட்ட இன்பங்களும் எஞ்சிய தனிமையும் வாட்டிக் கொண்டிருக்கின்றன. பெண் சுகத்தை கிட்டதட்ட உடம்பு மறந்தே போய்க் கொண்டிருக்கிறது.பணம் கொடுத்து பரத்தையரை நாடும் கொழுப்பும் இல்லை, பணமும் இல்லை.நட்புக்கு கூட நேரமில்லாமல் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இத்தகைய நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரணை சுத்தம் செய்ய நேர்ந்த போது இடியட் என் கண்களை கவர்ந்தது.

எடுத்து படிக்க உட்கார்ந்தால் பரபரவென பாதி புத்தகம் ஓடி வி்ட்டது. தஸ்தேயவஸ்கி சித்தரிக்கும் பண்ணைக்கால ரஷ்யாவின் வாழ்க்கை முறை, பெருங்கதையாடல்கள், உரையாடல்கள் யாவும் சலிக்க வைத்தாலும் ஊடாக அவர் வாழ்வின் தரிசனமும் வரிகளில் நுட்பமாக பதிவாகியுள்ளது. எனது குழப்பமான சிந்தனைகளுககு ஒரு தெளிவையும் என் எண்ணம், பாதை மீதான நம்பிக்கையை மீட்கவும் இடியட் உதவியது. கிறித்துவ நம்பிக்கைகளின் அடிப்படையி்ல் சில அவதானிப்புகளை தாஸ்தேயவஸ்கி பதிவு செய்கிறார். அதில் ஒன்று becoming என்பதையே உலகம் நாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கிறித்துவம் being என்பதையே குறிப்பிடுவதாக ஓரிடத்தில் தாஸ்தேயவஸ்கி கூறுகிறார். எதையும் செய்யாமல் எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இரு என்று ஆத்மா நாம் எழுதிய கவிதையும் சும்மா இருந்தாலும் புல்தானாகவே முளைக்கிறது என்ற ஜென் கவிதையும் நம்மை மீறிய ஏதோ ஒன்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை கூறுகின்றன.இருத்தலே பெரும் இன்பம் எதுவோ ஒன்றாக ஆவதில் இல்லைஎன்ற துணிபு மீண்டும் ஏற்படுகிறது. இன்னும் அரை நூற்றாண்டு வாழ்வையும் வீணாக்கி பார்த்து விடலாம் என்றும் தோன்றுகிறது.சார்த்தர் சொன்னது போல் being and nothingness

இடியட்டின் நாயகனான மிஷ்கின் தனது குடும்பத்தின் வேர்களை நாடி தொடங்கும் பயணத்திலிருந்து ஆசிரியர் பல்வேறு பாத்திரங்களை அறிமுகம் செய்தபடி போகிறார்.....முழு நாவலைப் படிப்பேனா என தெரியவில்லை ஆனால் படிக்க படிக்க பரவசம் தருகிறது. படிக்கும் போது பல கேள்விகள் எழுகின்றன. பல பதில்கள் கிடைக்கின்றன. மகத்தான இலக்கியம் எது என்பதையும் அது தனிநபர் மீது ஏற்படுத்தும் பாதி்பபு எது என்பதையும் மீண்டும் தாஸ்தேயவஸ்கியின் மூலம் அனுபவமாகியுள்ளது

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமாரா நூலகத்தில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது கையில் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் புத்தகத்துடன் வந்த இளைஞன் தற்கொலை செய்யும் முடிவில் இருந்தான் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். அவன் திருநெல்வேலியிலிருந்து ஓடி வந்துவிட்டான்.
அந்தப் புத்தகம் அவனை அலைக்கழித்திருந்தது. என்னையும் பின்னர் மிகவும் பாதிக்க வைத்த புத்தகம். ஆனால் அப்போது அந்த இளைஞனுக்கு நம்பிக்கைகளை விதைத்து ஊருக்கு அனுப்பி வைத்தோம்.

புத்தகங்களை வெறும் காகிதங்களாகப் பார்க்க கூடாது என்பதை மீண்டும் பதிவு செய்யலாம். அது பலரின் வாழ்வு, எண்ணம், தரிசனங்கள், தவிப்புகளை கொண்டுள்ளது.
நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் எனக்கு அண்மையில் ஒரு இமெயில் அனுப்பியிருக்கிறார். அதில் என்னைப் பற்றி அடிக்கடி நினைப்பதாகவும் எனது குடோன் தெரு ( எனது நாவல் கிடங்குத் தெரு ) பற்றி நினைப்பதாகவும் கூறியிருக்கிறார். இதை விட வேறு மகிழ்ச்சி இல்லை ஒரு படைப்பாளிக்கு.
இடியட் என்ற நாவலின் தலைப்பே என் போன்ற இடியட்டுகளுக்ககாவே படைக்கப்பட்டதோ என்னவோ









Wednesday, 28 January 2015

ராஜ்கபூர் எனும் கலைஞர்

இந்தியாவின் சார்லி சாப்ளின்
நடிகர்இயக்குனர் ராஜ் கபூரின் திரைப்படங்கள்
செந்தூரம் ஜெகதீஷ்
ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் புனேயில் ராஜ்கபூர் நினைவாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் பற்றியவீடியோ செய்தித் தொகுப்பை வெளியிட்டுள்ளதுஇதைப் பார்த்ததும் அந்த மகத்தான திரைப்படக்கலைஞரின் நினைவுகளில் மூழ்கி விட்டேன்.
ஒருவரின் புன்னகைக்கு முன்னுதாரணமாக இருங்கள்அல்லது
ஒருவரின் கண்ணீரைத் துடைப்பதற்கு துணையாக இருங்கள் என்று அனாரி படத்தில் பாடிய மகத்தானகலைஞர் அவர்ஒருவரின் கண்ணீருக்கு ஒருபோதும் காரணமாக இருந்துவிடாதீர்கள் என்றுமனிதநேயத்தை அள்ளி இறைத்தவர் ராஜ்கபூர்.
சார்லி சாப்ளின் படைத்த டிராம்ப் கதாபாத்திரங்கள் உலகப் புகழ் பெற்றவைவறுமையிலும்ஏழ்மையிலும் வாழ்க்கையைக் கொண்டாடும் பாத்திரம் தான் டிராம்ப்சாப்ளினே சொன்னது போல நாம் பல நேரங்களில் கண்ணீரை மறைப்பதற்காகவே சிரித்துக் கொண்டிருக்கிறோம்செல்வந்தர்களுக்குவாழ்க்கையில் சுகபோகங்கள் ஏராளம்ருசியான உணவு, சொகுசுப் பயணம் ,உடைநகைகள்மரியாதை,
மதிப்புஆமாம் சாமி போட ஆட்கள்அழகான 
இளம் பெண்கள்ஏர் கண்டிஷன் வாழ்க்கை என நாகரீகசுகபோகங்களுக்கு ஆசைப்படாத மனிதர்கள் யாருமில்லைஆனால் அதற்காக தமதுமனிதாபிமானத்தையும் மனசாட்சியையும் தொலைத்தவர்களை நோக்கித்தான் சார்லி சாப்ளின் தமதுதிரைப்படங்களை ஆயுதமாக்கினார்.
செல்வந்தர்களுக்கு வாழ்க்கையை அனுபவிக்க 
ஆயிரமாயிரம் இன்பங்கள் கொட்டிக் கிடக்கின்றனஏழைவாழ்க்கையைஅனுபவிக்க அவனிடம் இருப்பது அன்பு மட்டும்தான்அன்பினால் செழிக்கும் 
இவ்வையகம்என்று ஏழையை விட யாரறிவார்
தமது நட்புகள் உறவுகளை அந்த அன்பினால்
பிணைத்துக்கொள்பவன்தான் ஏழை டிராம்ப்
அன்பில் தான் அவன் வாழ்க்கையைக் கொண்டாடுகிறான்அன்பில்தான்அவன் இறைவனை காண்கிறான்அந்த அன்பில்தான் அவன் வாழ்க்கையும் கொண்டாட்டம் ஆகிறது.காதல் அன்பின் அடிப்படையில் எழுகிறதுஆன்மீகமும் அன்பின் அடிப்படையில் எழுகிறது.
மனிதாபிமானமும் தேச பக்தியும் அன்பின் அடிப்படையில் எழுகிறது.
சாப்ளினின் டிராம்ப் கதாபாத்திரத்திற்கு இந்திய வடிவம் கொடுத்தவர் ராஜ்கபூர்நடிகர் பிருத்விராஜ்கபூரின் மகனாக 1924ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிறந்தவர் ராஜ்கபூர். 11 வயது முதலே சினிமாவில்நடித்து வந்த அவர் 
ஆவாராஅனாரிஆஹாஆக் போன்ற  வரிசைப்படங்களின் மூலம் புகழ் பெற்றார்.ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற மகத்தான இயக்குனர்களுடன் நடிகராக பணியாற்றிய ராஜ்கபூர்ஆர்.கே.பிலிம்ஸ் என்ற தமது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குனராகவும் உயர்ந்தார்அவர்இயக்கிய படங்களில் காதலும் மனிதநேயமும் இரு கண்களாக இடம்பெற்றனஅறம் அதன் 
ஆன்மாவாகஇருந்ததுஇதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஸ்ரீ 420 என்ற படம்.
ஸ்ரீ 420 படத்தில் ஏழையான ராஜ்கபூர் பணத்தின் மீது மோகம் கொண்டு ஏழைப் பெண்ணின் காதலைநிராகரித்து பணக்காரப் பெண்ணின் காதலை நாடிச் செல்வார்
பணம்பகட்டு போன்றவற்றால்வழிதவறிய அவர் ஒரு பாடல் காட்சியில் திரும்பிப் பார்க்காதே வாழ்க்கையில் முன்னேறு முன்னேறுஎன்று கலியுக மனிதர்களின் கொள்கையை பிரதிபலித்தார்ஆனால் அவரது ஏழைக்காதலியாக நடித்தநர்கிஸ் நடித்த பாடல் காட்சியொன்றில்முன்னே போகிறவரே சற்று நடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தபடி செல்லுங்கள்...நீங்கள் நிராகரித்து விட்ட மனிதர்களை நினைத்தபடி செல்லுங்கள் என்றுபாடுவாள்இதுதான் ராஜ்கபூர் வகுத்த அறத்தின் பாதைஅந்தப் பாடலில் ஒலித்தது அறத்தின் 
குரல்.
மாமனாராக கூடிய செல்வந்தர் ஏழை எளிய 
மக்களிடம் சீட்டுக் கம்பெனி நடத்தி பல லட்சம் 
ரூபாய்மோசடி செய்த விவகாரத்தை பின்னர் ராஜ்கபூர் உணர்கிறார்செல்வந்தர்களின் செல்வம் பலரது
உழைப்பின் வேர்வைரத்தம்கண்ணீர் கறை படிந்தது என்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்கிறார்.அப்போது மனம் உடைந்து தனது ஏழைத் தோழர்களை 
நாடி குடிசைப்பகுதிக்கு வருவார் ராஜ்கபூர்.அங்கே 
ராமய்யா வஸ்தாவய்யா என்று அந்த ஏழை மக்கள் 
ஆடிப்பாடி அவரை வரவேற்பார்கள்திருந்திவரும் 
மனிதனும் உண்மையை உணர்ந்து வரும் மனிதனும்தான் மகத்தான மனிதன் என்று புரிதலுடன்ராஜ்கபூர் அந்த ஏழைகளின் உரிமைக்காக போராடுவதாக கிளைமாக்ஸ்  அமைக்கப்பட்டிருக்கும்.ராஜ்கபூருக்கு இத்தகைய இடதுசாரி சிந்தனையை விதைத்தவர்களில் 
முக்கியமானவர் எழுத்தாளர் கே..அப்பாஸ்
அவர்தான் இதுபோன்ற படங்களின் கதை வசனகர்த்தாவாக இருந்தார்.
சங்கம் படம் இன்றைய தமிழ்ப்படத்தின் இருமடங்கு
நீளம் உடையது. 24 ரீல் 2 இடைவேளை எனவெளியான படம் அதுஇந்தப் படத்தில் ஸ்ரீதர் பாணி முக்கோண காதல் 
கதையைப் படம் பிடித்தராஜ்கபூர் மூன்றே கதாபாத்திரங்கள் மூலம் 24 ரீல்களையும் மிகமிக சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுஷோமேன் ஆப் தி மில்லினியம் என புகழ் பெற்றார்இப்படத்தில் ராஜ்கபூரின் நண்பராகராஜேந்திரகுமாரும் மனைவியாக வைஜயந்தி 
மாலாவும் நடித்திருந்தனர்இந்தப்படத்திலும் 
பாடல்கள் பிரமாதமாக அமைந்துவிட்டனராஜ்கபூரின் இசையமைப்பாளர்கள் சங்கர் ஜெய்கிஷண்பாடலாசிரியர் சைலேந்தர் பாடகர் முகேஷ் ஆகியோர் மாயாஜாலங்களை நிகழ்த்தினார்ராமய்யா வஸ்தாவையாவைமுகமது ரபியை வைத்து பாட வைத்த ராஜ்கபூர் 
இப்படத்திலும் ராஜேந்திர குமாருக்கு முகமது ரபியின்குரலைப் பயன்படுத்தி  மேரா பிரேம் பத்ர என்ற இனிமையான பாடலை வழங்கினார்தமது குரலாகஅவர் எப்போதும் போல முகேஷையே வரித்துக் கொண்டார்முகேஷ் பாடிய போல் ராதா போல்பாடலும் தோஸ்த் தோஸ்த் நா ரஹா பாடலும் அந்தக் காலம் முதல் 
இன்றுவரையிலும் சூப்பர் ஹிட்பாடல்களாக நிலைத்துவிட்டன.
இந்தப் படத்தில் வைஜெயந்தி மாலா நீச்சலுடையில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார்தேன் நிலவிலும்
அவர் நீச்சலுடையில் நடித்த்தாக கூறப்பட்டாலும் 
வண்ணப்படத்தில் இத்தனை மார்பழகை காட்டி அவர்வேறு படங்களில் நடிக்கவில்லை.
நடிகைகளின் மார்பகங்கள் மீது ராஜ்கபூருக்கு தனி வசீகரம் இருக்கத்தான் செய்ததுபழம்பெரும் நர்கிஸ்கூட அவர் படத்தில் ரவிக்கை அணியாமல் வெள்ளைப் புடவையில் நனைந்தபடி ஒருபாடல் காட்சியில்நடித்தார்ஆனால் அவர் முதுகு மட்டுமே ரசிகர்களுக்கு காணக்கிடைத்த்துஆவாராவில்நீச்சலுடையிலும் நர்கிஸ் 
நடித்தார்.
ராஜ்கபூரின் படங்களில் முக்கியமானது மேரா நாம் ஜோக்கர்இதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்தவர் நாட்டியப் பேரொளி என தமிழ்ப்படங்களில் புகழ் பெற்ற நடிகை பத்மினிமுன்பே அவர் ராஜ்கபூரின் ஜிஸ்
தேஷ் மே கங்கா பெஹ்தி படத்தில் ரவிக்கை அணியாமல் கச்சையும் புடவையும் அணிந்து இலைமறைவு 
காய் மறைவாக கவர்ச்சி காட்டியிருந்தார்மேரா நாம் ஜோக்கரில் பத்மினி முற்றும்துறந்துவிட்டார்
குளியல் காட்சியொன்றில் தனது மார்பகங்களை நிர்வாணமாக அளித்தார்மற்றொருகாட்சியில் சட்டை கிழிந்து ஒரு மார்பு முழுவதும் வெளியே தெரியும்படி நடித்தார்எல்லாவற்றுக்கும்மேலாக ஒருபாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி ரவிக்கை அணியாத மார்பழகை தாராளமாககாட்டினார்ஆனால் முலைக்காம்புகள் தெரியாத வகையில் அதில் பேண்ட அய்ட் 
போன்ற ஏதோ ஒருபிளாஸ்தர் ஒட்டியிருந்தனர் 
போலும்மற்றபடி மார்பகத்தின் முழு சைசும் 
தெரிந்தது.
ராஜ்கபூரின் இந்த ரசனை ஜீனத் அமனிடமும் 
மந்தாகினியிடமும் தொடர்ந்தது.சத்தியம் சிவம் சுந்தரம்படத்தில் ஜீனத் அமன் இதேபோல் நிர்வாணமாக 
நடித்தார்ராம்தேரி கங்கா மெய்லியில் மந்தாகினியும்வெள்ளைப் புடவையில் மார்பகத்தை காட்டினார்.
பாலூட்டும் காட்சியிலும் மந்தாகினியின் முழுமார்பகங்களை இந்தி சினிமா ரசிகர்கள் கண்டு களித்தனர்.
மேரா நாம் ஜோக்கர் படத்திலும் நிர்வாணக்காட்சிகள் முத்தக்காட்சிகள் இடம்பெற்றனஆனால்
பின்னால் சென்சாரால் அவை நீக்கப்பட்டனஇருப்பினும் நடிகை சிமி ஒரு குளத்தில் குளித்து ஆடைமாற்றும் காட்சி அவசர அவசரமாக வந்து போனது.
இப்படத்தில் நடித்த ரஷ்ய நடிகை ராஜ்கபூருடன் 
முத்தக்காட்சியில் நடித்திருந்தார்.
பாபி படத்தில் ராஜேஷ் கன்னாவின் மனைவியான 
டிம்பிள் கபாடியாவை டூ பீஸ் பிகினியில்அறிமுகம் 
செய்தவரும் ராஜ்கபூர்தான்
ஹென்னா படத்துடன் ராஜ்கபூரின் திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்த்துஆயினும் அவரது பிற்காலத்துப் படங்களைக்காட்டிலும் ஆரம்பக்காலத்தில் அவர் இயக்கியநடித்த கருப்புவெள்ளைப்படங்களும் சங்கம்பிரேம் ரோக்பாபி,மேரா நாம் ஜோக்கர் போன்ற படங்களும் ராஜ்கபூர் சினிமாவுக்கு அளித்துள்ள 
கொடைகள்.
ராஜ்கபூர் ஜூன் மாதம் 2ம் தேதி தமது 63வது வயதில் காலமானார்அவரது சகோதரர்கள் ஷ்ம்மி கபூர்,சசி கபூர்ரந்தீர் கபூர்,  மகன் ரிஷிகபூர் மருமகள் நீது சிங்ரந்தீர் கபூரின் மனைவி பபிதா ஷம்மி கபூரின்மகன் ராஜீவ் கபூர்பேத்திகள் கரிஷ்மா கபூர்கரீனா கபூர்பேரன் ரன்பீர் கபூர் என இந்தக் கலையுலககுடும்பத்தின் பெயர்ப்
பட்டியல் சற்று பெரிதுதான்.
ராஜ்கபூரின் திரைப்படங்களும் அதன் தேனிசைப் 
பாடல்களும் எந்த ஒரு புதிய ரசிகனுக்கும் பழைய ரசிகன்
பெற்ற அதே பரவசத்தை தரவல்லவைஅதனாலேயே 
ராஜ்கபூரின் இடம் திரையுலகில் ஈடு செய்ய இயலாத
இடமாக இருக்கிறது.
குமுதம்-தீராநதி ஜூன் 2015 இதழில் பிரசுரமானது
K.Jagadish

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...